Tuesday, March 19, 2013

தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது



தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது

 

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது. 
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 
ஓசூர்
Hosur2

ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை


தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி – தமிழக இளைஞர் முன்னணி சார்பில், அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் செனீவா அறிக்கையைக் கண்டித்தும் இவ்விரு அறிக்கைகளும் பாடையில் கொண்டு செல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு செயலாளர் தோழர் தட்சிணாமூர்த்தி, புலவர் இரத்தினவேலவர், ம.தி.மு.க. ஒன்றீயச் செயலாளர் இரா.நந்தகுமார், விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்புச்செயலாளர் தோழர் அருண்மாசிலாமாணி, புதியத் தமிழகம் ஒன்றியச் செயலாளர் இராசமோகன், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் அர்புதராசு உள்ளிட்ட திரளான முன்னணியாளர்களும், பொது மக்களும் இதில் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் தலைமையிலான தோழர்கள், இந்திய அரசின் அறிக்கை மற்றும் அமெரிக்கத் தீர்மானத்தை இராசபக்சே உருவபொம்மையுடன் கட்டி பாடையில் கொண்டு வந்து, எழுச்சி முழக்கங்களுக்கிடையேத் தீயிட்டுக் கொளுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேரணியை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
சிதம்பரம்
Chid1

சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
அப்போது இந்திய – சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெண்ணாடம்
பெண்ணாடம் பேருந்துநிலையம் அருகில் மாலை 5 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு த.இ.மு.நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சித் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், ஆசிரியர் மாசிலாமணி, தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இராமகிருட்டிணன், மனித நேயப் பேரவை பஞ்சநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அமெரிக்கத் தீர்மானம் தீயீட்டுக் கொளுத்தப் பட்டது, இதில் திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் உண்ணாப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. உண்ணாப்போராட்டத்தை தமிழக இளைஞர் முன்னனி திருச்சி அமைப்பாளர் தோழர் த.தியாகராசன் தொடக்கி வைத்தார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பாவலர் முவ.பரணர், ம.தி.மு.க. அரசியல் ஆலோசகர் புலவர் முருகேசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ் கலை இலக்கியப் பேரவை செயலாளர் தோழர் இராசாரகுநாதன், தலைவர் இரெ.சு.மணி, மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் பானுமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன், தோழர் இனியன், தூவாக்குடி த.தே.பொ.க. பொறுப்பாளர் தோழர் வி.க.லெட்சுமணன்,ம.தி.மு.க. திருச்சி மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments:

Post a Comment