Wednesday, September 18, 2013

வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்ட - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது! சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை


“ தமிழ் நாடு என்ன திறந்த வீடா? வெளியாரின் வேட்டை காடா? “
வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்ட - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது! சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை 


வெளிமாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை - குடும்ப அட்டை கொடுக்கக் கூடாது, தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர் நிரந்தர சொத்து வாங்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பின் தமிழக துணைப் பொதுச் செயலாளர் தோழர், ஆ.குபேரன் தலைமையில் 04.09.2013 அன்று சிதம்பரம் காசுக்கடைத்தெரு தொடங்கி, லால்கான் தெரு, மேலவீதி, தெற்கு வீதி சபாநாயகர் தெரு, அண்ணாமலை நகர், கீழவீதி, வேணுகோபால் தெரு, செ.பி. கோயில் தெரு, ஓமகுளம் , மந்தகரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்பரப்புரையில். வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என மக்களை சந்தித்து கோரிக்கையை விளக்கி துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

தில்லை நடராசர் ஆலயத்தை சுற்றியுள்ள முதன்மை வீதிகளில் மட்டும் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மொத்த விற்பனை கிடங்குகள், காலி மனைகள் என மார்வாரி மலையாளி குசராத்தி சேட்டுகளின் பிடியில் உள்ளன.

இந்நிலையில் வெளியாரை வெளியேற்றக் கோரி நகரின் முக்கியப் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த சுவர் எழுத்துகள் , வெளியார் ஆதிக்கம் குறித்து நடத்தப்பட்ட பரபரப்பையும் பொதுமக்களிட்த்தில் வரவேற்பையும் ஆதரவை பெற்றது. சிதம்பரத்தில் வெளியாரின் ஆதிக்கம் குறித்து நகை வணிகர்கள், தானிய மொத்த விற்பனையாளர்கள் தொடங்கி சிறு வணிகம் நடத்துவோர் எனப் பலதரப்பட்டவர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கோரிக்கை வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் - வில்லைகள் கடைகள், தானிகள், தனியார் பேருந்துகளில் ஒட்டப்பட்டன.

பரப்புரையின் நிறைவாக 18.09.2013 காலை 11 மணிக்கு வெளிமாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது, தமிழ் நாட்டில் நிரந்தர சொத்து வாங்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

பரப்புரையில், த.இ.மு துணைப் பொதுச் செயலாளர் ஆ.குபேரன், த.இ.மு முன்னாள் துணைத் தலைவர் பா.பிரபாகரன், சிதம்பரம் நகரத் தலைவர் ந.இராசேந்திரன், து.செயலாளர் கி.சதீசுகுமார், நகரப் பொருளாளர் சு.சுகன்ராஜ், ப.க.கார்த்திக், இரா.எல்லாளன், செ.மணிமாறன், திருமாறன், அ.மணிகண்டன் தமிழக மாணவர் முன்னணி சிதம்பர நகர அமைப்பாளர் வே.சுப்ரமணியசிவா உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Monday, September 16, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது. குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை



வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது. 
குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை 

அண்மைக்காலமாக தமிழ் நாட்டில் பிற மாநில மக்கள் குடியேற்றம் பெருமளவில் அதிகரித்துவருகிறது.

மார்வாடிகள் மலையாளிகள், பீகாரிகள், என அயல் இனத்தாரின் ஆயிரம் ஆயிரமாய் தமிழ் நாட்டில் வந்து குவிகிறனர்.

அண்மையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ன் படி தமிழ் நாட்டில் குழந்தைப் பிறப்பின் மூலம் புதிதாக உயரும் தமிழ் மக்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஈடாக – கிட்டதட்ட அதே அளவுக்கு, அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது.

அயல் மாநிலத்தவரின் இந்த மிகை நுழைவு இதே அளவு நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழர்களின் தாய்மொழி, தாயகம், பண்பாடு, சமூகநீதி, தனித்தன்மை அனைத்தும் சீர்குலையும். தமிழ் மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக மாற்றப்படுவர்.

குடந்தை - சாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், விளைநிலங்கள் வெளியார் கைக்கு மாறிவருகிறது.

இன் நிலையில் குடந்தை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ் நாட்டில் வாக்களர் அட்டை குடும்ப அட்டை கொடுக்க்க் கூடாது என கோரி குடந்தையில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

16-09-2013 அன்று மாலை 6:00 மணிக்கு த,இ.மு குடந்தை நகரச் செயலாளர் தோழர் ச.செந்தமிழன் தலைமையில் குடந்தை கும்பேசுவ்ரர் தெற்குவீதி தொடங்கி பேருந்து நிலையம் வரை பரப்புரை நடைபெற்றது

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் துண்டறிக்கை வழங்கி பரப்புரை நடைபெற்றது, தோழர்கள் கொண்டு சென்ற வெளியார் எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஒட்டு வில்லைகளை தங்கள் வீடுகளில், வணிக நிறுவன்ங்களில் ஆர்வத்துடன் ஒட்டி ஆதரவளித்தனர். குடந்தை பகுதியில் வெளியார் ஆதிக்கம் குறித்த தாக்கங்களை மக்கள் தோழர்களுடன் மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

பரப்புரையில் த.இ.மு த.தே.பொ.க நகரச் செயலாளர் க.விடுதலைச்சுடர், த.இ.மு சாமிமலை கிளைச்செயலாளர் ம.சரவணன் த.தே.பொ.க சாமிமலை கிளைச் செயலாளர் ம.முரளி, ம.பிரபு, க.தீந்தமிழன், இரா.அருள், தேவராயன்பேட்டை த.இ.மு கிளைச் செயலாளர் பிரபாகரன் , கு.வெங்கடேசன் உட்பட திரளான தோழர்கள் கலந்துகொண்டு பரப்புரை செய்தனார்.

Sunday, September 8, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது. சென்னையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை


வெளிமாநிலத்தவருக்கு  வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
சென்னையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை




சென்னை கிழக்குத் தாம்பரம் பகுதியில், 30.08.2013 அன்று மாலை நடைபெற்ற ..மு. துண்டறிக்கைப் பரப்புரை, கிழக்குத் தாம்பரம் முதன்மைச் சாலை, பரத்வாஜ் தெரு, வால்மிகி தெரு, திருவள்ளுவர் தெரு, காலமேகம் தெரு வழியாக கிழக்குத் தாம்பரம் முதன்மைச் சாலை - இளங்கோவன் தெரு அருகில் நிறைவடைந்தது.

31.08.2013 அன்று பல்லாவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பரப்புரை, கேட்டல் சான்டி சாலை வழியாக பல்லாவரம் சந்தைப் பகுதி வணிக நிறுவனங் களிலும், ரங்கநாத முதலித் தெரு வழியாக தொடர் வண்டிநிலையம் சந்தை பகுதி வரையிலும் நடை பெற்றது.

08.09.2013 அன்று படப்பை பேருந்து நிலையத்தில் தொடங்கிய பரப்புரை, பேருந்து நிலையச் சாலை, படப்பை முதன்மைச் சாலை, வழியாக கலைஞர் நகர் வரை தொடர்ந்தது. அதன் பின், வணிக நிறுவனங்கள் நிறைந்த படப்பை சந்தைப் பகுதியில் பரப்புரை நடை பெற்றது.

இப்பரப்புரை நிகழ்வுகளில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் . அருண பாரதி, தாம்பரம் ..மு. தலைவர் தோழர் இளங்கு மரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை ..மு. செயலாளர் தோழர் கோவேந்தன், .தே.பொ.. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தோழர்கள் சரவணன், முத்துக்குமார், குமரேசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.


பரப்புரையின் போது, தோழர்கள் துண்டறிக்கையை பொது மக்களிடம் வழங்கியதோடு அதிலுள்ள விவரங் கள் குறித்து விளக்கிப் பேசினர். பல தமிழ் வணிகர்கள், வெளியாரால் தாம் பாதிக்கப்பட்டதை விவரித்து, பரப்புரைக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கோரிக்கையை விளக்கும் வகையில் ..மு. சார்பில் உருவாக்கப்பட்ட ஒட்டிகளை, தானி ஓட்டுநர்கள் ஆர்வத்துடன் தங்களது வாகனங்களில் வாங்கி ஒட்டிக் கொண்டனர்

Wednesday, September 4, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது. பெண்ணாடம் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை

வெளிமாநிலத்தவருக்கு  வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
பெண்ணாடம்  தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை

பெண்ணாடம் பகுதியில், 23.08.2013 அன்று பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, முதன்மைச் சாலை வழியாக காவல் நிலையம் வரையிலும், 24.08.2013 பெலாந்துறை, கணபதிக்குறிச்சி பகுதிகளிலும், 25.08.2013 அன்று கருவேப்பங் குறிஞ்சியிலும், 31.08.2013 அன்று விருதாச்சலத்திலும், 4.09. 2013 அன்று விருதாச்சலம் அரசுக் கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலும் பரப் புரை இயக்கம் நடைபெற்றது.


பரப்புரை இயக்கத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையேற்க, .தே.பொ.. கிளைச் செயலாளர் தோழர் கனக சபை உள்ளிட்ட திரளான தோழர் கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .முருகன் தோழர்களை வழிநடத்தினார்