Monday, September 16, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது. குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை



வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது. 
குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை 

அண்மைக்காலமாக தமிழ் நாட்டில் பிற மாநில மக்கள் குடியேற்றம் பெருமளவில் அதிகரித்துவருகிறது.

மார்வாடிகள் மலையாளிகள், பீகாரிகள், என அயல் இனத்தாரின் ஆயிரம் ஆயிரமாய் தமிழ் நாட்டில் வந்து குவிகிறனர்.

அண்மையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ன் படி தமிழ் நாட்டில் குழந்தைப் பிறப்பின் மூலம் புதிதாக உயரும் தமிழ் மக்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஈடாக – கிட்டதட்ட அதே அளவுக்கு, அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது.

அயல் மாநிலத்தவரின் இந்த மிகை நுழைவு இதே அளவு நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழர்களின் தாய்மொழி, தாயகம், பண்பாடு, சமூகநீதி, தனித்தன்மை அனைத்தும் சீர்குலையும். தமிழ் மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக மாற்றப்படுவர்.

குடந்தை - சாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், விளைநிலங்கள் வெளியார் கைக்கு மாறிவருகிறது.

இன் நிலையில் குடந்தை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ் நாட்டில் வாக்களர் அட்டை குடும்ப அட்டை கொடுக்க்க் கூடாது என கோரி குடந்தையில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

16-09-2013 அன்று மாலை 6:00 மணிக்கு த,இ.மு குடந்தை நகரச் செயலாளர் தோழர் ச.செந்தமிழன் தலைமையில் குடந்தை கும்பேசுவ்ரர் தெற்குவீதி தொடங்கி பேருந்து நிலையம் வரை பரப்புரை நடைபெற்றது

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் துண்டறிக்கை வழங்கி பரப்புரை நடைபெற்றது, தோழர்கள் கொண்டு சென்ற வெளியார் எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஒட்டு வில்லைகளை தங்கள் வீடுகளில், வணிக நிறுவன்ங்களில் ஆர்வத்துடன் ஒட்டி ஆதரவளித்தனர். குடந்தை பகுதியில் வெளியார் ஆதிக்கம் குறித்த தாக்கங்களை மக்கள் தோழர்களுடன் மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

பரப்புரையில் த.இ.மு த.தே.பொ.க நகரச் செயலாளர் க.விடுதலைச்சுடர், த.இ.மு சாமிமலை கிளைச்செயலாளர் ம.சரவணன் த.தே.பொ.க சாமிமலை கிளைச் செயலாளர் ம.முரளி, ம.பிரபு, க.தீந்தமிழன், இரா.அருள், தேவராயன்பேட்டை த.இ.மு கிளைச் செயலாளர் பிரபாகரன் , கு.வெங்கடேசன் உட்பட திரளான தோழர்கள் கலந்துகொண்டு பரப்புரை செய்தனார்.

No comments:

Post a Comment