Saturday, October 5, 2013

தஞ்சையில் வெளியார் எதிர்ப்புப் பரப்புரை


தஞ்சையில் வெளியார் எதிர்ப்புப் பரப்புரை


தஞ்சையில் 05.10.2013 அன்று, தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் நுழைந்து கொண்டிருக்கும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாதென வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

த.தே.பொ.க. தஞ்சை நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில், மேரிஸ் முனையிலிருந்து காலை 11 மணியளவில், தொடங்கியப் பரப்புரை முக்கிய வீதிகளின் வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் துண்டறிக்கைகள் வழங்கியபடி நடைபெற்ற பரப்புரையின் போது, கோரிக்கை வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பல வணிகர்களும், தானி ஓட்டுநர்களும் தானே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களிலும், தானிகளிலும் ஒட்டிச் சென்றனர்.

பரப்புரையில், த.தே.பொ.க. நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், த.இ.மு. நகரப் பொருளாளர் தோழர் லெ.இராமசாமி, தோழர்கள் பாலகிருட்டிணன், சூர்யா உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். 




No comments:

Post a Comment