வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
சென்னையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை
சென்னை கிழக்குத் தாம்பரம் பகுதியில், 30.08.2013 அன்று மாலை நடைபெற்ற த.இ.மு. துண்டறிக்கைப் பரப்புரை, கிழக்குத் தாம்பரம் முதன்மைச் சாலை, பரத்வாஜ் தெரு, வால்மிகி தெரு, திருவள்ளுவர் தெரு, காலமேகம் தெரு வழியாக கிழக்குத் தாம்பரம் முதன்மைச் சாலை - இளங்கோவன் தெரு அருகில் நிறைவடைந்தது.
31.08.2013
அன்று பல்லாவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பரப்புரை, கேட்டல் சான்டி சாலை வழியாக பல்லாவரம் சந்தைப் பகுதி வணிக நிறுவனங் களிலும், ரங்கநாத முதலித் தெரு வழியாக தொடர் வண்டிநிலையம் சந்தை பகுதி வரையிலும் நடை பெற்றது.
08.09.2013
அன்று படப்பை பேருந்து நிலையத்தில் தொடங்கிய பரப்புரை, பேருந்து நிலையச் சாலை, படப்பை முதன்மைச் சாலை, வழியாக கலைஞர் நகர் வரை தொடர்ந்தது. அதன் பின், வணிக நிறுவனங்கள் நிறைந்த படப்பை சந்தைப் பகுதியில் பரப்புரை நடை பெற்றது.
இப்பரப்புரை நிகழ்வுகளில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருண பாரதி, தாம்பரம் த.இ.மு. தலைவர் தோழர் இளங்கு மரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை த.இ.மு. செயலாளர் தோழர் கோவேந்தன், த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தோழர்கள் சரவணன், முத்துக்குமார், குமரேசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.
பரப்புரையின் போது, தோழர்கள் துண்டறிக்கையை பொது மக்களிடம் வழங்கியதோடு அதிலுள்ள விவரங் கள் குறித்து விளக்கிப் பேசினர். பல தமிழ் வணிகர்கள், வெளியாரால் தாம் பாதிக்கப்பட்டதை விவரித்து, பரப்புரைக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கோரிக்கையை விளக்கும் வகையில் த.இ.மு. சார்பில் உருவாக்கப்பட்ட ஒட்டிகளை, தானி ஓட்டுநர்கள் ஆர்வத்துடன் தங்களது வாகனங்களில் வாங்கி ஒட்டிக் கொண்டனர்.
No comments:
Post a Comment